விடலைப் பருவத்துக் காதலை சொன்னப் பாடல். மிதமான இசையில் மனதை வருடும் பாடல்.
-------------------------------------------
ஆனந்தராகம் கேட்கும் காலம்,
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே,
ஆயிரம் ஆசைகள் என் நெஞ்சம் பாடாதோ,
(ஆனந்த......,)
துள்ளி வரும் உள்ளங்களில்
தூது வந்து தென்றல் சொல்ல
தூவும் எங்கும் இன்பத்தின்
ஆனந்த தாளங்களை ,
வெள்ளி மலை கோலங்களை
அள்ளிக் கொண்ட மேகங்களை,
காணும் நெஞ்சில் பொங்கட்டும்
சொந்தத்தின் பாவங்கலை
பள்ளமின்றி உள்ளங்கள் துல்லிஎழ
பற்றிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல எழ
ராகங்கள் பாட, தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ,
(ஆனந்த.......)
வண்ண வண்ண எண்ணங்களும்,
வந்துவிழும் உள்ளங்களும்
வானின் நீரில் ஊர்வலம் போகும் காலங்களே
சின்ன, சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்,
சீரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்றுமுதல் இன்பங்கள் பொங்கிவரும்
இந்தமணம் எங்கெங்கும் சென்று வரும்.
காவிய ராகம் காற்றினில் கேட்கும்,
ஆனந்தங்கள் ஆரம்பம்
(ஆனந்த....,)
படம்: பன்னீர் புஷ்பங்கள்,
நடிகர்கள்: சுரேஷ், உமா,
இசை: இளையராஜா,
பாடியவர்: சசிரேகா,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக