27.9.10
எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் என்றாலே தனி பிரியம் உண்டு. அவர் குரலில் மெலோடிஸ் என்றால், கரும்பு தின்ன கூலியா வேண்டும்? அவரே இசையமைத்து அவர் பாடிய பாடல் ஒன்று.
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை.
(வண்ணம்....,)
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாசையில்லை,
சுவாசிக்க ஆசையில்லை
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாசையில்லை,
சுவாசிக்க ஆசையில்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை,
தள்ளி தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை.
(வண்ணம்....,)
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்....,
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவிக் கொண்டு நான் நடப்பேன்.
(வண்ணம்...,)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக