13.11.10

சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
(சொன்னது....,)

மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே...,

(சொன்னது ...,

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
(அன்று சொன்னது...,

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர்: பி.சுசிலா,
நடிகைகள்: முத்துராமன், தேவிகா
எழுதியவர்: கண்ணதாசன்


8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாட்டுப்பாட்டி...?ஹி ஹி

எல் கே சொன்னது…

இன்னொரு தேன்கிண்ணம் ??



remove word verification

R.Gopi சொன்னது…

வாவ்...

என்ன ஒரு அருமையான பாடல்...

உணர்ச்சியை அப்படியே பாடலில் கொண்டு வர எம்.எஸ்.வி. - கண்ணதாசன் கூட்டணியை மிஞ்ச ஆளில்லை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான மலரும் நினைவுகள்.

Sivakumar சொன்னது…

/ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா//

கூட்டணி பத்தி என்னமா எழுதி இருக்காங்க..

சிவகுமாரன் சொன்னது…

உங்கள் கண்ணாடியில்
எட்டிப் பார்த்தேன்.
அட
என் முகமும் தெரிகிறது.

ம.தி.சுதா சொன்னது…

நான் சொல்லவே இல்ல.. ஹ..ஹ..ஹ.

sprajavel சொன்னது…

இன்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா...