சில பாட்டுக்களை கேட்கும்போது இதயத்திற்கு யாரோ கைவிட்டு பிசைவது போலிருக்கும். அதுப்போன்ற பாடல்களில் ஒன்றுதான் கருப்புசாமி குத்தகைக்காரர் படத்தில் வரும் உப்புக்கல்லு...
உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது -ஏங்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தச் சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது – நீ
தப்பிச் சொல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதித் தாளைப் போல வீணே
நாளும் கிழியறேன் -நான்
தேர்வுத் தாளை கண்ணீ ரால
ஏனோ எழுதுறேன்
நாளும் கிழியறேன் -நான்
தேர்வுத் தாளை கண்ணீ ரால
ஏனோ எழுதுறேன்
இது கனவா? இல்லை நிஜமா?
தற்செயலா? தாய் செயலா?
நானும் இங்கு நானும் இல்லையே
தற்செயலா? தாய் செயலா?
நானும் இங்கு நானும் இல்லையே
(உப்புக்கல்லு....,)
நானும் வாடினேன் -நீ
ஏழு வண்ண வானவில்லாய்
என்னை மாத்துன
தாயும் இல்லை என்று உள்ளம்
நேற்று ஏங்கினேன் -நீ
தேடி வந்து நெய்த அன்பால்
நெஞ்சத் தாக்கின
நேற்று ஏங்கினேன் -நீ
தேடி வந்து நெய்த அன்பால்
நெஞ்சத் தாக்கின
கத்தி இன்றி ரத்தம் இன்றிக்
காய்ப்பட்டவள் – உன்
கண்கள் செய்த வைத்தியத்தால்
நன்மையடைகிறேன்
காய்ப்பட்டவள் – உன்
கண்கள் செய்த வைத்தியத்தால்
நன்மையடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி
சேதப்பட்டவள் – உன்
நிழல் கொடுத்த தைரியத்தால்
உண்மையறிகிறேன்
சேதப்பட்டவள் – உன்
நிழல் கொடுத்த தைரியத்தால்
உண்மையறிகிறேன்
(உப்புக்கல்லு ......,)
உன்னைக் காண்கிறேன் – நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம்
வேதமாகுதே பாழடைந்த வீடு போல
அன்று தோன்றினேன் -உன்
பார்வை பட்ட காரணத்தால்
கோலம் மாறுதே
கட்டிலுண்டு மெத்தை உண்டு
ஆன போதிலும் – உன்
பாசம் கண்டு தூங்கவில்லை
எனது விழிகளே
தென்றலுண்டு திங்களுண்டு
ஆன போதிலும் – கண்
நாளும் இங்கு தீண்டவில்லை
உனது நினைவிலே
(உப்புக்கல்லு....,)
படம்: கருப்பசாமி குத்தகைக்காரர்,
நடிகர்கள்: கரண், நடிகை பெயர் தெரியலை.
பாடியவ: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர்: யுகபாரதி
இசை: தீனா.