18.12.11

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால்
நெஞ்சிலோர் நிம்மதி


ஆ ...அ அ அ ஆ....


நாள்முழுதும் பார்வையில்
நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற..

                    ( கேளடி கண்மணி...... )


எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் சிறைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதற்பாடல்தான்


கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி


நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

                                                                           ( கேளடி கண்மணி...... )
                                                        
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா


ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்த் தானே உண்டானது


கால் போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது
                                                       
                    ( கேளடி கண்மணி...... )
பாடல் : கேளடி கண்மணி...
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி




இளமையெனும் பூங்காற்று

ளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒருபொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்


இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒருபொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை.. ஒரே ராகம்..



தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா.!
                                           (
இளமையெனும் பூங்காற்று...)


அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ
என்ன உறவோ.!
                                    (
இளமையெனும் பூங்காற்று.......,)

மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ.!


இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒருபொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்


ஒரே வீணை.. ஒரே ராகம்..
ஒரே வீணை.. ஒரே ராகம்..


பாடல் : இளமையெனும் பூங்காற்று...
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம் : பகலில் ஒரு இரவு
இசை : இளையராஜா
வரிகள் : கண்ணதாசன்

முன்பனியா? முதல் மழையா-நந்தா

மிக அழகான ஆழமான பாடல்வரிகள், இனிமையான இசை, கேட்கும்போதே ம‌னதில் புரியாத தவிப்பை ஏற்படுத்தும்!


முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
(முன் பனியா..)

படம்: நந்தா
பாடியவர்கள்- பாலசுப்ரமணியம்,  மால்குடி சுபா
நடிகர்கள்: சூர்யா, லைலா