11.1.12

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரோழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் 
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை 
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

                                       (என்கே எனது....)
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட 
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே... கேட்குதே…
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
                                    (எங்கே எனது......)


படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்
பாடல் வரி : வைரமுத்து

பிரியாத வரம் வேண்டும்...,

விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது


உயிர் சுனை ஊற்றிலே
நெருப்பினை ஊற்றினாய்
பெளர்ணமி கோப்பையில்
இருள் குடித்தாய்
                            

ஒஹோ... ஹோ... ஒ...
ஒஹோ... ஹோ... ஒ...
                                (விடை கொடு விடை கொடு.....)



நிலவின் பேச்சை கேட்டேன்
மொழியை பிழிந்து போட்டேன்
வாழ்த்தினேன் வருகிறேன்
நியாபகத்தை கோர்த்தேன்

உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை 
ஒரு முறை வெளியில் எடு 

உந்தன் சாலைகள் நெடுகிலும் பூ விழும்
மரங்களை வளர்க்கிற உரிமை கொடு

நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை தூரமே அழைக்கிறதே
                             
ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ ஒ...
                                 (விடை கொடு விடை கொடு.....)
 
உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய் நூறு முறை தானே


இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற
வார்த்தையில் மெளனத்தில் இடருகிறாய்


உள்ளே நடைபெறும் நாடகம் திரை விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்


தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே


விடைகளே கேள்வியாய் ஆகிறதே


ஒஹோ ஹோ ஒ...
ஒஹோ ஹோ ஒ...
                               (விடை கொடு விடை கொடு.....)
படம் : பிரியாத வரம் வேண்டும் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா
பாடல் வரி : 
வைரமுத்து
நடிகர்கள்: பிரசாந்த், ஷாலினி