பெண்: உன்னைத் தானேத்
தஞ்சம் என்று வந்தேன் நானே.
உயிர் பூ எடுத்து, ஒரு மாலையிட்டேன்.
விழிநீர் தெளித்து
ஒருக் கோலமிட்டேன்.
(உன்னைத்....)
மலரின் கதவொன்றுத் திறக்கின்றதா?
மௌனம் வெளியேறத் தவிக்கின்றதா?
பெண்மை புதிதாகத் துடிக்கின்றதா?
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா?
முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக் குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப் பிடித்தால், தொட்டு இழுத்தால்
வெட்கமென்ன சத்தம் போடுதா?
ஆண்: என்னைத் தானே தஞ்சம் என்று வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து, ஒரு மாலையிடு,
விழி நீர் தெளித்து, ஒருக் கோலமிடு.
(என்னைத்...,)
உலகம் எனக்கென்றும் விளங்காதது,
உறவே எனக்கின்று விலங்கானது.
அடடா, முந்தானை சிறையானது,
இதுவே என் வாழ்வில் முறையானது .
பாறை ஒன்றின் மேலே சிறுப் பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே.
(என்னைத்...,)
படம் : நல்லவனுக்கு நல்லவன்.
நடிகர்கள்: ரஜினிகாந்த், ராதிகா,
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், P.சுசீலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக